Friday 22 February 2013

ஒரு இணையப் பக்கம் எப்படி வேலை செய்கிறது?


 http://www…………………………….. .com. உங்கள் உலாவியில்(Browser) (Google Chrome,Internet explorer,Firefox,Opera ,Maxthon இப்படி ஏதாவது) தட்டச்சு செய்ததும், என்ன ஆச்சரியம் அந்தப் பக்கம் உங்கள் கண் முன்னே வருகிறது. படிக்கிறீர்கள்.
உங்கள் நண்பர் சரியாக கொடுக்காது போனால் அல்லது நீங்கள் தவறாக எழுதி வைத்துக் கொண்டாலும் கூட,(error 404 என்ற செய்தி வரும்) ஒரு தேடு பொறியின் மூலம் (google search,yahoo searh,bing இப்படி) தேடி சிறிது தாமதத்தின் பின் அந்தப் பக்கத்திற்கு செல்ல முடியும்.சரியான முகவரியை கொடுத்தால் ஆட்டோக்காரர் உடனே கொண்டு போய் விடுவது போல்.(நல்ல ஆட்டோக்காரர் ஆக இருந்தால்?) சென்றடையும். இந்த முகவரியை,(URL – uniform resource locator), மூன்று பிரிவுகளாக,(Http (protocol); server name ; file name (……..htm.,….) பிரிக்கிறார்கள்.(HTTPS என்பது மிக பாதுகாப்பான பக்கமாக கருதப்படுகிறது.(வங்கி போன்றவற்றை சொல்லலாம்) எடுத்துக்காட்டாக,http://askintamil.com/?p=188 இப்படி இருக்கலாம்.இதில் p=188 என்பது file ன் பெயர்.
நீங்கள் கொடுத்த முகவரி IP இலக்கமாக மாற்றப்பட்டு வலைவாசல் வழியே(PORT) அனுப்பப்படும்.(port என்பதை ip இலக்கத்துடன் நீங்கள் காணலாம்.)
நீங்கள் உலாவியில் கொடுத்த முகவரி(server – வழங்கி) இணையம் மூலம் அனுப்பப்பட்டு,உங்கள் விருப்பத்தை(get request) அங்கே தெரிவித்ததும், அந்த server ,HTML TEXT(HyperText Markup Language) ஆக உங்கள் கணினியில் உள்ள உலாவிக்கு அனுப்பும்.இப்போது நீங்கள் விரும்பிய பக்கம் உங்கள் கணினித் திரையில் தோன்றும்.அந்த server நீங்கள் கேட்ட விபரங்களை அனுப்பும் போது,அதன் தலைப்பாக ஒரு cookie ஐயும் சேர்த்து அனுப்பும்.அந்த Data பக்கெட் வந்ததும்,உலாவி அதை பின்னர் திருப்பி வழங்குனருக்கு அனுப்பும்.இந்த cookie உங்கள் உலாவியில் சேமிக்கப்படும்..இவற்றில் சில cookie கள் worm,spyware,spamming,போன்ற கெடுதல்களைத் தரலாம் என்பதால்,நீங்கள் அனைத்தையும் அல்லது,தேவையற்றவற்றை அழித்து விடலாம்.
இணையத்தில் பயணிக்கும் Data பக்கெட்டின் வேகம் வினாடிக்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட (1.5 million bits per second )வேகத்தில் அனுப்புவதால் தான்,உலகில் எங்கிருந்தாலும் விரைவாக நமக்கு கிடைக்கிறது.
இங்கே நம்மை நுகர்பவர்(client) எனவும், நாம் கேட்பதை தருபவரை வழங்குபவர்(server) எனவும் குறிப்பிடுகிறார்கள்.
இது போலவே ஒரு வழங்கியின் (server) IP இலக்கத்தை நாம் நினைவு படுத்தி வைத்திருப்பது சிரமம் என்பதால், வழங்குபவருக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள்.இதை Domain name என்கிறார்கள்.அதாவது askintamil.com இன் IP இலக்கம் 95.211.121.129 ஆக இருந்தால் உங்களால் நினைவில் வைத்திருக்க முடியுமா? அதனால் ஒரு domain பெயராக askintamil என பெயரிட்டு இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,IP இலக்கம் மாறக் கூடியது.பெயர் எப்போதும் ஒரே பெயராக இருக்கும்.இங்கேயும் மூன்றாக பிரிக்கப்படுகிறது.Host-www.domain name . Com (இங்கே com,net,org இப்படி பல வரலாம்). இந்த டொமைன் ஐ domain name server (DNS) என்கிறார்கள்.
மேலே சொன்ன port ,ஒரு சேர்வரில் ஒரு வெப் சேர்வரும்,ஒரு FTP server உம் இருக்குமானால்,அந்த சேர்வர் வெப் பக்கத்திற்கு port 80 எனவும், FTP பக்கத்திற்கு 21 எனவும் பிரித்து வைத்திருக்கலாம்.(இந்த port, smtp -25,www -80 ,telnet -23 இப்படி வேறுபடலாம்)
உலாவி,browser,என்பது ஒரு மென் பொருளாகும். இந்த மென்பொருள் நாம் தேடுவதை தேடுபொறி மூலம் தேடி,நம்மை வழ்ங்குனருடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.
நீங்கள் தேடிய பக்கம் எப்படி சென்றது,எவ்வளவு நேரம் எடுத்தது என்பதைக் கண்டறிய,கணினியில்,command prompt ல் சென்று tracert http://www………………. என அல்லது tracert (IP Number) கொடுத்தால் முழு விபரங்களையும் தரும்.சில சமயங்களில் சிரமம் அல்லது தாமதம் ஏற்பட்டால் Request timed out என்ற செய்தி வரும்.

Wednesday 13 February 2013

Virtual Memory ஐ அதிகரிப்பது எப்படி?


Virtual Memory ஐ அதிகரிப்பது எப்படி?

 கணினியில் உள்ள செயலிகள் மற்றும் அனைத்தும் முறையாக இயங்க RAM(Random Access Memory )தற்காலிக நினைவகம் தேவைப்படுகிறது.இந்த RAM அளவு காணாமல் போகும் போது விண்டோஸ் வந்தட்டில் உள்ள free space ல் இருந்து கொடுத்து உதவும். கணினி செயல்கள் வேகம் குறையும் போது RAM ல் உள்ள தரவுகளை வந்தட்டில் உருவாக்கப்பட்ட சேமிப்பில் தற்காலிகமாக சேமித்து உதவுகிறது.இது paging files எனப்படுகிறது.
வந்தட்டில் உருவாக்கப்படும் சேமிப்பகத்தை Virtual Memory (Ram ) என்று சொல்லப்படுகிறது.இதை விண்டோஸ் தானியங்கியாக அமைத்துக் கொண்டாலும் கூட, நாம் நமக்கு வேண்டிய வகையில்,நமது வந்தட்டில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்து மாற்றி அமைக்க முடியும்.
Start – Control Panel – System and Maintenance -System – Advanced system settings -Advanced tab- Performance -Settings -
Advanced – Virtual memory – Change- Automatically manage paging file size for all drives -Maximum size (நமக்கு வேண்டியபடி)- OK
இந்த அளவு RAM அளவின் 1.5 மடங்கு ஆகும்(குறைந்த அளவு)கணினி வந்தட்டின் காலி இடத்தைப் பொறுத்து நான்கு மடங்கு வரை அளவை(maximum) அதிகரிக்கலாம்.
உதாரணமாக..RAM= 512 MB ; Virtual Memory 512 x 1.5 = 768 MB ல் இருந்து 512 x 4 = 2048 வரை.(Hard Disk ல் போதுமான free space இருந்தால்)
இந்த RAM Memory USB மூலமும் அதிகரிக்கலாம்.

நாம் ஒரு இயங்குதளம்/OS நிறுவியவுடன் என்ன செய்ய வேண்டும்?


நாம் ஒரு இயங்குதளம்/OS நிறுவியவுடன் என்ன செய்ய வேண்டும்?

பலருக்கு OS புதிதாக அல்லது reinstall செய்த பின் பல பிரச்சனைகள் வருவது உண்டு. அந்த நிலையில்,ஒரு இயங்குதளத்தை நிறுவிய பின் முக்கியமாக என்ன செய்ய வேண்டும்,என்பதை பார்க்கலாம்.
முதலில் ஒரு கணினியின் Hard Disk 10-15 தடவைகளுக்கு மேல் ஃபொர்மட் செய்யப்படுமானால் அதன் ஆயுள் மெல்லக் குறையும் அல்லது பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு,முடிந்தவரை ஃபொர்மட் செய்வதைக் குறைத்து தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்வதே மேலானது.
OS கணினியில் நிறுவப்பட்டுவிட்ட பின், அனைத்து device களுக்கு உரிய driver கள் நிறுவப்பட்டுள்ளதா எனவும்,தேவை ஏற்படின் update ம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் start disk அல்லது Repair/rescue disk தயாரித்துக் கொள்ள வேண்டும்.கணினியில் பிரச்சனைகள் தொடக்குவதில் பிரச்சனைகள்,போன்றவை வரும் போது இந்த repair disk கொண்டு சரி செய்து கொள்ளலாம்.
அனைத்து மென்பொருட்களை தனியாக partition ஒன்றில் சேமிக்க வேண்டும்.Firewall ஐ அக்டிவ் செய்து கொள்ள வேண்டும்.சாதாரண ஒரு கணக்கை உருவாக்கி நாம் கணினியை பாவித்தால் (admin ac ஐப் பாவிக்காது),வேண்டாத மென்பொருட்கள் நம் கணினியில் நமக்கு தெரியாமல் இன்ஸ்டால் ஆவதை தடுத்துக் கொள்ளலாம்.
உடனே antivirus இல்லாமல் இருந்தால், விண்டோஸ் defender ஐ அக்டிவ் செய்து கொள்ளலாம்.UAC ஐ சரி செய்து கொள்ளலாம்.
அனைத்து Driver களையும்,Registry ஐயும் தனியாக Backup செய்து வைத்திருப்பின் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.பல தவறுகள் registry காரணமாக வருகிறது.
Auto/Customs முறையில் update active செய்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை Ccleaner/Glary மூலம் Temp. ,cookies, histories போன்றவற்றை அழிப்பதுடன் defragmentation செய்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கணினியை Backup செய்தும் கொள்ளலாம்.

sakthyv

Tuesday 12 February 2013

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை சினிமாவும் நிறுத்தவில்லை,சாமியார்களும் பக்தர்களும் நிறுத்தவில்லை. பாம்பு cold blooded வகையை சேர்ந்தது. உடல் உஷ்னத்தை நம்மைப் போல் கட்டுப்படுத்தும் சக்தி கிடையாது. அப்பாடா களைத்துப் போனேன் என்று வியர்வை துடைக்க பாம்பினால் முடியாது.
பாம்பு உணவை அப்படியே எடுத்துக் கொண்டு,சிறிது சிறிதாக பின்னே தள்ளுகிறது.முற்றாக செமிபாடு ஆக இரண்டு நாளில் இருந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.அதனால் உணவை எடுத்துக் கொண்டதும்,எங்காவது புற்றிலோ,பாறைகளுக்கு அடியிலோ சரணாகதி அடைந்து விடுகிறது. நம்மைப் போல் கல்யாண சமையல் சாதம் என்று,மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கத் தெரியாது.உணவில் இருந்து பெற்றுக் கொள்ளும் நீர் அதற்கு போதுமானதாகும்.பாம்பு பாலை மட்டுமல்ல எதையும் குடிக்காது.நாம் நமது உதட்டில் ஒரு சில துளிகளை வைத்தால் உள்ளே உறிஞ்சிக் கொள்வது போல்,ஒரு சில துளிகளை உறிஞ்சிக் கொள்ளலாமே தவிர பால் குடிப்பதற்கு கடவுள் வழி செய்யவில்லை.
தோலை கழற்றும் சமயங்களில் சிறிது அதிக தண்ணீர்தன்மை தேவைப்படுகிறது அவ்வளவு தான்.பாம்பிற்கு பாலை வாயில் பாலாத்காரமாக செலுத்தினால் தவிர பாம்பினால் பாலைக் குடிக்கவும் முடியாது, அதை செமிபாடு செய்யவும் முடியாது,மீறி நாம் பாலை பாம்பின் வாயிற்குள் பலாத்காரமாக செலுத்தினால்,அதை செமிபாடு செய்ய முடியாமல் அதுவே பாம்பிற்கு நஞ்சாகி செத்து விடும்.
நாம் நாக்கால் சுவைப்பது போன்று,மூக்கால் உணவின் மணத்தை தெரிந்து கொள்வது போன்று,பாம்பு நாக்கால் (நாக்கு என்று சொல்லப்படும் பாகத்தால்) இரையை, நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம், மணத்தை அறிந்து கொள்கிறது. பாம்பிற்கு அசையும் கண்ணோ,வெளிக் காதுகளோ கிடையாது.இருந்தும் இன்றும் படித்தவர்கள் கூட பாம்பிற்கு பால் ஊற்றுவதை நிறுத்தவில்லை.
பாம்பாட்டியின் நாதத்தைக் கூட பாம்பினால் கேட்க முடியாதென்பதும்,பாம்பாட்டியின் அசைவை வைத்தே அது அசைகிறது என்பதையும் இன்னமும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் மிக மென்மையான சத்தத்தை 200 முதல் 300 Hz வரை,நிலத்தில் அசையும் போது ஏற்படும் அதிர்வுகளை,காற்றினால் ஏற்படும் அதிர்வுகளையும் பாம்பினால் ஏற்றுக் கொள்ள முடியும்.அதற்கு வெளிக் காதுகள் இல்லாத நிலையில் வெளி தோல் மற்றும் எலும்புகள் மூலம் கிரகிக்கப்பட்டு உட்காதுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் பாம்பாட்டியின் மகுடியின் சத்தத்தையோ அல்லது எகிப்து போன்ற சில நாடுகளில் உள்ள பாம்பாட்டிகளின் புல்லாங்குழல் இசையையோ கேட்க அதனால் முடியாது.
அத்துடன் பாம்பிற்கு ஆறாவது அறிவும் உண்டு.பாம்பின் முன் பகுதியில் உள்ள சிறிய பகுதியின் மூலம் வெளி வெப்ப நிலையை அறிந்து கொள்ளுகிறது. நமக்கு இருக்கும் ஆறாவது அறிவை நாம் தான் பாவிப்பதில்லையே.

STROKE – பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்


STROKE – பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். குருதி மூளைக்கு செல்வது தடைப்படும் போது ஏற்படும் இந்த stroke, இரண்டு வகைப்படும். பொதுவாக வரும் ischemic stroke என்பது மூளை இரத்த நாளத்தில், இரத்தம் உறைதல்,clot, மூளைக்கு இரத்தம் செல்லாததாலும்,மற்றது hemorrhagic stroke, இரத்த நாளம் வெடித்து இரத்தம் வெளியேறுவதாலும் ஏற்படுவது.இதை விட, ஒரு சிறிய நேரம் இரத்தம் தடைப்பட்டு சரியாவது.இதை குறுகிய ,mini stroke ,என்பர். மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதால் ஆக்சிஜின் இல்லாமல் மூளை குருதி கலன்கள்(செல்கள்) மிக விரைவில் அழிந்து விடும்.
நடைத் தளர்வு,மயக்கம்,திடீர் சிந்தனைத் தடை.பேச்சுத்தடை,ஒரு பக்கம் கை கால் செயலிளப்பது,தடுமாற்றம்,திடீர் தலைவலி போன்றவை ஏற்படலாம்.உடன் மருத்துவரிடம் செல்வதால் இரத்தக்கட்டியை அகற்றி இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி விடலாம். மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகாத பட்சத்தில் குணப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
பொதுவாக 55 வயதிற்கு மேற்பட்டவர்கள்,பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்பட்டாலும்,இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்களே அதிகம்,கவலையீனமாக இருக்கும் டயபிடிஸ் நோய் உள்ளவர்கள்,இரத்த அழுத்தம்,புகை,மது பாவனையாளர்கள்,கொலஸ்டெரரோல் அதிகம்,உடற்பருமன் உடையவர்கள்,மன அழுத்தம்,கற்பத்தடை மாத்திரை பாவிப்பவர்கள், போன்றவர்களுக்கு வர வாயிப்புண்டு.
ஆரம்ப முதலுதவி சிகிச்சையாக ……………நாம் சில முறைகளை முயற்சிக்கலாம்.
S………….Smile……..அதாவது மெல்ல சிரிக்கும்படி சொல்லி அவர் நிலையை அறியலாம்.
T………….Talk……..எப்படி இருக்கிறது,பெயர் என்ன போன்ற சிறிய கேள்விகளைக் கேட்டு அவர் நிலையை அறியலாம்.
R…………..Raise….இரண்டு கைகளையும் உயர்த்தும்படி கேட்கலாம்.
மேற்சொன்ன படி செய்வதால் அவர் மூளையில் குருதி ஓட்டம்,உறைவு பற்றி அறிந்து கொள்ள முடியும்.
இவைகளில் அவர் சிரமப் பட்டால் உடனே மருத்துவரிடம் தாமதமின்றி கொண்டு செல்ல வேண்டும்.
இதை விட அவர் நாக்கும் நேராக இருக்காது வளைந்து ஒட்டியபடி இருந்தாலும் அறிகுறி என சொல்லலாம்.
தெருவில் அல்லது வேறு எங்கோ உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றுங்கள்.பொலீசார் வரும்வரை காத்திருந்து உயிரின் அழிவிற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். காப்பாற்றாது விடுவதும்,சிகிச்சை செய்யாது விடுவதும் சட்டப்படி குற்றமாகும். சினிமா படப்பிடிப்பைப் போல் வேடிக்கை பார்ப்பதை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள்.



Monday 11 February 2013

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!


உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!

வணக்கம் நண்பர்களே..! பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள்.
(win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக்
செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும்
டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும்
தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok
கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings
என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

sakthyv


Wednesday 6 February 2013

systattin ip அட்ரஸ் எப்படி தெரிந்து கொள்வது . சற்று விளக்கமாக சொல்லவும்

உங்களுக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்.அப்போது தான் உங்களை அழைக்க முடியும்.கணினிக்கும் ஒரு பெயர் வேண்டும்.ஆனால் எழுத்திலே ஒரு பெயரை கணினிக்கு கொடுத்தால் அதற்கு விளங்காது. கணினிக்கு விளங்கக் கூடிய ஒரு வழி இலக்க வழி,கணினி மொழி தான். அதனால் தான் கணினிக்கு இலக்க வடிவில் பெயர் கொடுத்துள்ளார்கள்.அது IP.
IP என்பது 0 – 255 ற்கு உட்பட்ட நாலு எண் கூட்டைக் கொண்டது.(66.72.98.236 or 216.239.115.148 )
static IP என்பது உங்கள் இன்டெர்னெட் தொடர்பு தருபவர்களால், BSNL, … தரப்படுவது,அனேகமாக ஒரே எண்ணாக இருக்கும். Dynamic IP என்பது நீங்கள் ஒவ்வொருமுறையும் இன்டெர்னெட் போகும் போதும் மாறக் கூடியது.ஆனாலும் உங்கள் இணைப்பு broadband ஆக இருந்தால்,அதாவது router மூலம் இணைக்கப்பட்டால், இந்த dynamic IP எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
நீங்கள் உங்கள் கணினியில் start. – all programs- accessories – command prompt ல் சென்று ipconfig/all என எழுதினால் உங்கள் ip முழு விபரமும் காட்டும். தற்செயலாக தற்போதய ip4 address போதுமானதாக இல்லையேல் உங்கள் கணினி புதிய ip6 ல் வேலை செய்யக் கூடியதாக அமைத்துள்ளார்கள். உங்கள் கணினியின் ip6 address ஐயும், அங்கே காண முடியும்.
ஒரு பக்கத்தின் IP ஐ கண்டறிய start. – all programs- accessories – command prompt ல் சென்று ping google.com என கொடுத்து enter செய்தால் google.com ன் IP ஐ காட்டும்.

நன்றி.
sakthyv